வாகன விபத்தில் குழந்தை உயிரிழப்பு!

Date:

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலபனாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ரெலபனாவ பாடசாலைக்கு முன்பாக ரெலபனாவ நோக்கிச் பெண் ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பயணித்த குழந்தையொன்று படுகாயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியில் வசித்து வந்த ஒன்றரை வயது குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. அக்குழந்தையின் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த பெண்ணின் அதிவேகமும் கவனக்குறைவும் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதினையும் அவதானிக்க முடிகின்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...