வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.எல். பீரிஸிற்கு மீண்டும் அமைச்சு பதவி!

Date:

வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார்.

அதற்கு பதிலாக, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் பீரிஸை ஜனாதிபதி மீண்டும் நியமித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி, அமைச்சின் பெயர் வெளிவிவகார அமைச்சு என்பதிலிருந்து வெளிவிவகார அமைச்சு என மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில், பேராசிரியர் பீரிஸின் மீள் நியமனம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பெயருக்கான திருத்தம் 2022 பெப்ரவரி 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு வெளிநாட்டு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவர் மீண்டும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...