2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டியில், இலங்கையின் மொஹமட் இர்ஷாத்

Date:

தேசிய ஸ்னூக்கர் சம்பியனான மொஹமட் தாஹா இர்ஷாத் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உலக ஸ்னூக்கர் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பினை இலங்கையில் இருந்து பெற்றிருக்கார்.

இந்த ஆண்டின் ஜுலை மாதம் 7 ஆம் திகதி தொடக்கம், 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த ஸ்னூக்கர் விளையாட்டுப்போட்டிகளில் ஆடும் வாய்ப்பினை இர்ஷாத் தாஹா கட்டாரில் ஒழுங்கு செய்யப்பட்ட (Billiard) உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில் வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தின் மூலம் பெற்றிருந்தார்.

கனிஷ்ட சிரேஷ்ட பிரிவுகளில் இலங்கையின் ஸ்னூக்கர் மற்றும் பில்லியார்ட் சம்பியனாக காணப்படுகின்ற இர்ஷாத் கட்டாரில் நடைபெற்றிருந்த 21 வயதின் கீழ்ப்பட்ட போட்டியாளர்களான உலக ஸ்னூக்கர் சம்பியன்ஷிப் தொடரிலும் அடுத்தடுத்த வெற்றிகளுடன் இலங்கையின் நாமத்தினை உலகறியச் செய்திருந்தார்.

இதேவேளை இலங்கை, தாய்லாந்து, ஈரான் இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சிரியா, ஜேர்மனி மற்றும் கட்டார் போன்ற முன்னணி நாடுகுளின் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...