அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து பாதிப்பு

Date:

அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக நுகேகொடை தெல்கந்தவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் விஜேராம சந்தியில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் ஹைலெவல் வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண அரசாங்கம் தவறியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையில், ஜே.வி.பியும் பாரியதொரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெறும் இப்போராட்டத்தில் ஜே.வி.பி. சார்பு தொழிற்சங்கங்களும், மாணவர் அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...