‘அரசாங்கத்தை கவிழ்க்கும் நேரம் இதுவல்ல, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதே முக்கியம்’ : ரணில்

Date:

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் கிரீஸ் நாட்டைப் போன்ற நிலைமைக்கு வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேநேரம், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் நேரம் இதுவல்ல, மாறாக நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

2007-2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு கிரீஸ் நாடு கடன் நெருக்கடியை எதிர்கொண்டது. இது தொடர்ச்சியான திடீர் சீர்திருத்தங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் மக்களை சென்றடைந்தது.

இந்த நிலைமையானது வறுமை மற்றும் வருமானம் மற்றும் சொத்து இழப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுத்தது.

மேலும், கிரீஸ் நாடாக இலங்கை மாறக்கூடும் என சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, இலங்கையை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

‘பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஒன்றுபட்ட முயற்சி தேவை என்றும் தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசாங்கம் இயங்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...