இந்திய கடன் மூலம் ஐந்து நாட்களுக்குள் 80,000 மெற்றிக் தொன் டீசல்!

Date:

இந்திய கடன் வசதி மூலம் கிட்டத்தட்ட 80,000 மெற்றிக் தொன் டீசல் அடுத்த ஐந்து நாட்களில் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை ஏறக்குறைய 80,000 மெட்ரிக் தொன் டீசலின் முதல் சரக்காக 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் நாளை (1) வரவுள்ளது.

அதற்கமைய எஞ்சிய 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் செல்லும் இரண்டாவது கப்பல் எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரவித்துள்ளது.

இதேவேளை டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ இரட்டைச் சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது இயங்குவதால் ஏனைய அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...