இலங்கை வந்துள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரஜைகளின் வீசாக் காலம் நீடிப்பு!

Date:

தற்போது இலங்கையில் தங்கியுள்ள உக்ரைன் பிரஜைகள் மற்றும் ரஷ்யர்களுக்கான வீசாவின் செல்லுபடியை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேநேரம், இந்த சுற்றுலா பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசா நீட்டிப்பு இரண்டு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.

தற்போது, இலங்கையில் 1463 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும், 3993 உக்ரைன் சுற்றுலாப்பயணிகளும் தங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையால் அவர்களால் மீண்டும் தமது நாடுகளுக்குச் செல்வதற்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனைக்கருத்தில் கொண்டு குறித்த சுற்றுலாப் பயணிகளின் வீசா காலப்பகுதியை கட்டண அறவீடுகள் இன்றி இரண்டு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

தெற்காசியாவின் 2ஆவது அமைதியான நாடாக இலங்கை தேர்வு!

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (IEP)...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்க்கமான நாள்: அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு!

இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி: 7 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இடம்பெற்று வந்த போலி இஸ்ரேல்...

இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு...