சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இலங்கைக்கான முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்!

Date:

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இன்றைய தினம் அதிகாலை 1.20 மணியளவில் இலங்கை வந்துள்ளார்.

சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சரின் இருதரப்பு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இளவரசர் பைசலை இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் அல் ஹார்த்தி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இராச்சியத்தின் ஊழியர்கள் பலர் வரவேற்றனர்.

இதனிடையே இலங்கையில் நிலவும் எரிபொருள், பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவருடன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் 18 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய் வளம் மிக்க தேசத்தின் வெளியுறவு அமைச்சர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு (14) பின்னர் நேபாளம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...