‘தாள் தட்டுப்பாடுகளால் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை’:கல்வி அமைச்சர்

Date:

பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு தாள் தட்டுப்பாடு ஏற்படாது என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்துள்ளார்.

ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதன்போது, ‘பரீட்சைகளை திட்டமிட்டபடி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ‘தாள் தட்டுப்பாடு இருப்பதாக செய்திகள் வந்தன, இருப்பினும், அது தீர்க்கப்பட்டுள்ளதுடன் க.பொ.சாதாரண தரப்பரீட்சையை மே மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

ஏதேனும் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் கூடுதல் காகித கையிருப்புகளை வாங்க கடந்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.

மாநில பல்கலைக்கழக சேர்க்கை குறித்து பேசிய அமைச்சர், இந்த ஆண்டு மேலும் 10,000 இளங்கலை பட்டதாரிகளை சேர்க்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றார்.

‘இந்த ஆண்டு இறுதிக்குள் உயர்தரப் பரீட்சையை நடத்துவதே எங்களின் நோக்கம். பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...