நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி: நாளை ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம்!

Date:

(File Photo)
ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (22) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு நாளை மாலை 6.00 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட பொருளாதார விடயங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாளை மாலையில் நடைபெறவுள்ள விசேட கூட்டத்திற்கு முன்னதாக, ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழு நாளை காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...