பசில் இந்த மாத இறுதியில் இந்தியா பயணம்!

Date:

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான தகவல்களை கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் சிறிது நேரத்திற்கு பயனுள்ள மற்றும் சுமுகமான தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

சாத்தியமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.

அதேநேரம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயத்திற்கான பரஸ்பர வசதியான திகதியை இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் இறுதி செய்ய அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...