பிரதமர் மஹிந்தவின் கருத்தை கடுமையாக சாடிய விமல் !

Date:

தொடரும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கடுமையாக சாடியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், நாட்டில் உண்மையான எரிபொருள் நெருக்கடி இல்லை என்றும், சில முறையற்ற சில விடயங்களாலும் எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

துறைமுகத்தில் எரிபொருள் தாங்கிகள் நிறுத்தப்பட்டு, இறக்குதல் மற்றும் விநியோகம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், கடந்த காலங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே எரிபொருள் கிடைக்கும் காலங்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் கருத்து தொடர்பில் தாம் வருத்தமடைவதாகவும், இது ஒரு முட்டாள்தனமான அறிக்கை எனவும் சாடியுள்ளார்.

சில நாட்களுக்கு எரிபொருள் பற்றாக்குறையால் எரிபொருள் நெருக்கடி ஏற்படாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, எதிர்வரும் நாட்களில் எரிபொருள் நெருக்கடியை முழுமையாக தீர்க்குமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

இதேவேளை விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த தருணத்தில் எதிர்க்கட்சியில் தனிக் குழுவாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு விமர்சனங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, மூன்று உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து அரசை விமர்சிக்க வேண்டும் எனக் கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...