வாகன விபத்தில் குழந்தை உயிரிழப்பு!

Date:

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரெலபனாவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ரெலபனாவ பாடசாலைக்கு முன்பாக ரெலபனாவ நோக்கிச் பெண் ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் பயணித்த குழந்தையொன்று படுகாயமடைந்த நிலையில் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியில் வசித்து வந்த ஒன்றரை வயது குழந்தையே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளது. அக்குழந்தையின் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த பெண்ணின் அதிவேகமும் கவனக்குறைவும் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதினையும் அவதானிக்க முடிகின்றது.

Popular

More like this
Related

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...

தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில்...

தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு...