அடுத்த வாரம் பால் மா விலைகளை மேலும் அதிகரிக்க திட்டம்!

Date:

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அடுத்த வாரம் அதிகரிக்க பால் மா இறக்குமதி நிறுவனங்கள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டொலரின் மதிப்பு உயர்ந்ததே இதற்குக் காரணம் எனவும், அதற்கு ஏற்றாற் போன்று விலை அதிகரிப்பை செய்ய வேண்டியுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் கூறுகின்றன.

அதன்படிஇ எதிர்காலத்தில் கையிருப்பு பால் மாவுக்கான விலை கணக்கிடப்பட்டு புதிய விலை அறிவிக்கப்படும்.

இதேவேளை தற்போது சந்தையில் ஒருகிலோ பால் மா கிலோ 1945 ரூபாவுக்குக்கும் 400 கிராம் பால்மா பக்கட் ஒன்று 800 ரூபாவுக்கும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

சந்தையில் பால் மாவின் இருப்புக்கள் தீர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...