அமைச்சரவை இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி இன்று ஏற்றுக்கொள்வார்!

Date:

(File Photo)
அமைச்சரவையின் இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதனை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றையதினம், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளித்ததுடன், அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் நேறடறு பதவி விலக தீர்மானித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...