‘அரசாங்கத்திற்கு எதிர்கால திட்டமொன்று இல்லை’ : ஜீவன் தொண்டமான் பதவி விலகினார்

Date:

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தனது இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதன்படி, அரசாங்கத்திலிருந்து வெளியேற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், பாராளுமன்றத்திலும் ஆதரவு வழங்காதிருக்கவும் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நேற்றைய தினம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

குறிப்பாக மலையகத்திற்கான பல்கலைக்கழகம், ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை, ஆசிரியர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஜனாதிபதி அதற்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

எனினும், அரசாங்கத்திற்கு எதிர்கால திட்டமொன்று இல்லாமையினால், அதிருப்தி கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஊடகமொன்றுக்கு கருத்து வெளிட்டுள்ளார்.

இதற்கான இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (ஊறுஊ) தலைவர் செந்தில் தொண்டமான்இ பாராளுமன்றத்தில் சுதந்திரமாக இருக்க கட்சி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக செயற்படுவதற்கான தனது முடிவை அறிவித்த இரண்டாவது கட்சி இ.தொ.கா. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ளுடுகுP) நேற்றைய தினம் அரசாங்கத்தில் இருந்து விலகியதோடு இன்று பாராளுமன்றம் கூடும் போது சுயேச்சைக் குழுவாக செயற்படும் என அறிவித்தது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...