இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இன்று!

Date:

இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10.30 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.

கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகள் அடங்கிய குழு மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேட்;சையாக செயற்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் அமைக்கப்படும் காபந்து அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன், இடைக்கால அரசாங்கத்தின் கட்டமைப்பு, பதவிக்காலம் மற்றும் பொறுப்புகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

முன்னதாக கட்சிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...