இந்தியா, இந்தோனேசியாவிடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள்!

Date:

இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான காரியல் கப்பல் மூலம் இலங்கை வந்தடையும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கு நன்கொடையாக ஒரு வாரத்திற்குள் இந்தோனேசிய அரசாங்கத்திடமிருந்து 340 மில்லியன் ரூபாள் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள், கிடைக்கபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து மேலும் நன்கொடைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் இதற்கான உதவிகளை செய்து வருவதாகவும் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....