சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தாமதமாகலாம்: நிதி அமைச்சர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு பூர்த்தி செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளதாகவும் அதனால் நாணய நிதியத்தின் உதவிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாது, சிறிது காலம் எடுக்கும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவி குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றிரவு (22) அமெரிக்கா வொஷிங்டனில் இருந்து சூம் தொழில்நுட்பம் ஊடாக கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களுடன் நடத்திய ஊடக சந்திப்பின்போது நிதியமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, சர்வதேச நாணய நிதியம்- உலக வங்கி கூட்டங்களில் பங்கேற்பதன் பக்கமாக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து தாம் விளக்கமளித்துள்ளதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உட்பட உயர் அதிகாரிகளுடன் பல தடவைகள் கலந்துரையாடியதாகவும் அவர்களநல்லதொரு புரிந்துணர்வுடன் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரை 4 இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்திருந்தாலும், தற்போதுள்ள கடன்களை திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் புதிய கடன் எவ்வாறு எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறித்து சாதகமான உடன்பாடு எட்டப்பட வேண்டும் என அமைச்சர் கூறினார்.

மேலும், ஏப்ரல் மாதத்தில் 500 மில்லியன் ரூபாய் டொலர்கள் ஜூன் மாதத்தில் 500 மில்லியன் டொலர் மற்றும் ஜூலையில் 1 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் இந்த கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் இது செலுத்தப்படாத நிலைமை இல்லை என்றார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறும் வரை நாட்டை முன்னேற்றுவதற்கு 3 முதல் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி அமைச்சர் தேவைப்படும்.

இந்த நிதி கிடைக்கும் வழிமுறைகளுக்கு பாரிய நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமிருந்து உதவிகள் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இலங்கை மத்திய வங்கி 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தால் ரூபாயை ஸ்திரப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை உலக வங்கியுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், 300-600 மில்லியன் அமெரிக்க டொலர்களை ‘பிரிட்ஜிங் ஃபைனான்ஸ்’ வழங்குவதற்கு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அது விரைவில் பெறப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

அத்தியாவசிய மருந்துகள் உட்பட உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடியால் ஏழைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகளை வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார். மருந்துகள், உணவுப் பொருட்கள், இதர அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உரங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, தற்போதைய சூழ்நிலையை அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் சில நபர்களின் முயற்சிகளை அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார்.

கிடைத்துள்ள உதவிகளைப் பொருட்படுத்தாமல் முதலீடுகளை விரைவுபடுத்துவதே தற்போதைக்கு பிரதான சவாலாக உள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...