நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள்: ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

Date:

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்
தீப் பந்தம் ஏந்தியவாறு பல்கலைக்கழக பிரதான வீதியில் சற்று முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், இன்று (3) நாடு முழுவதும் பல பொதுப் போராட்டங்கள் காணப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

எவ்வாறாயினும், எம்பிக்கள் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் அவர்கள் பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டனர்.

மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) இன்று மஹரகமவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது, பின்னர் பொலிஸாரால் இடையூறு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.

இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளில் சிறிய சிவில் போராட்டங்களும் காணப்பட்டன. சிறிய குழுக்களாக பொது மக்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு காணப்பட்டனர்.

Popular

More like this
Related

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...