பிரதமரைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா!

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

“பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர்”.

அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும் சபைத் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் நீடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீதியமைச்சர் அலி சப்ரி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தமது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமாவை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...