முன்னாள் அமைச்சர்கள் வீட்டுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

Date:

முன்னாள் அமைச்சர் காமினி லொகுகேவின் பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் இருந்த பெரிய பதாகை ஒன்றிற்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின் முன்னால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் முன்னால் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த பதாகை ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு முன்னாலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை வீசியுள்ளனர்.

இன்றைய தினம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் பாரியளவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல்...

சவூதி அரேபியாவில் பிறை (ஹிலால்) பார்த்தல்: மரபு – நீதித்துறை – அறிவியல் – தொழில்நுட்பம் என்பவற்றின் ஒருங்கிணைப்பு.

சவூதி அரேபியாவில் பிறை பார்த்தல் என்பது ஒரு தனிப்பட்ட மார்க்கச் செயல்முறை...

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்ற விசேட குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்த வேண்டும்...