ரமழான் பண்டிகையை முன்னிட்டு கட்டார் சிறையில் உள்ள 20 இலங்கையர்களுக்கு விடுதலை!

Date:

ரமழான் பண்டிகையை முன்னிட்டு கட்டார் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் 20 இலங்கை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கட்டார் அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டுள்ள 20 இலங்கையர்களும் கட்டார் நாட்டில் கடமையாற்றும் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்றவர்களாவர்.

மேலும், சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, நாட்டில் உள்ள நீதிமன்றங்களால் செலுத்தப்பட வேண்டிய நிதி அபராதங்களிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியம் மேலும் தெரிவித்துள்ளது.

ரமழான் பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்ததற்காக கட்டார் அரசை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...