அமைச்சரவை இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி இன்று ஏற்றுக்கொள்வார்!

Date:

(File Photo)
அமைச்சரவையின் இராஜினாமா கடிதங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக இன்று கையளிக்கப்பட்டவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதனை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றையதினம், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களில் கையொப்பமிட்டு, அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளித்ததுடன், அமைச்சரவை இராஜினாமாக்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்க பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை தவிர்ந்த அமைச்சரவையிலுள்ள அனைத்து அமைச்சர்களும் நேறடறு பதவி விலக தீர்மானித்தனர்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில் இவ்வாறு அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (20) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...

ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில்..!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய நீக்கல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல்...