‘அரசியலமைப்பை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’: கட்சித் தலைவர்கள் கூட்டம் 28ஆம் திகதி!

Date:

அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாகவும், அரசியலமைப்புக்கு புறம்பாகவோ அல்லது அரசியலமைப்பை மீறியோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்னெடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் விடுத்த எழுத்துமூலக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அந்தவகையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...