‘அரசியலமைப்பை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது’: கட்சித் தலைவர்கள் கூட்டம் 28ஆம் திகதி!

Date:

அரசியலமைப்பை பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாகவும், அரசியலமைப்புக்கு புறம்பாகவோ அல்லது அரசியலமைப்பை மீறியோ எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்னெடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் விடுத்த எழுத்துமூலக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அந்தவகையில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பிரேரணைகள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...