அலரிமாளிகையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு: போராட்டக்காரர்களால் நிரம்பியது காலிமுகத்திடல்!

Date:

தற்போது காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் எழுச்சிப் போராட்டம் நாட்டில் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலையில், ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவிவிலகுமாறு கோரி உலக நாடுகளிலும் இலங்கையர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறும், அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் கோசம் எழுப்பி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அலரிமாளிகையை சுற்றி பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளமையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...