ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட பிரகடனத்தை இரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய இலங்கையில் நேற்று (ஏப்ரல் 05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அவசரகால பிரகடனத்தை இரத்து செய்யும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இலங்கையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.