‘ஈஸ்டர் தாக்குதல் உண்மையைக் கண்டறிய சர்வதேச உதவியைப் பெற தள்ளப்பட்டுள்ளோம்’ :வத்திக்கானிலிருந்து பேராயர்

Date:

(FilePhoto)

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற நாங்கள் தள்ளப்பட்டோம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக, இலங்கை ஆயர்கள் மற்றும் தாக்குதலில் காயமடைந்த குழுவினருடன், திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸ் நாளை சிறப்பு பிரார்த்தனை ஆராதனையை நடத்துகிறார்.

இந்நிலையிலேயே வத்திக்கானில் இருந்து மெல்கம் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ‘இது ஒரு அரசியல் நிகழ்வாக இருக்காது, ஈஸ்டர் ஞாயிறு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நடத்தப்படும் ஒரு சேவை மட்டுமே.

அவர்களின் அவல நிலையை உலகுக்கு காட்ட மட்டுமே நாங்கள் விரும்புகிறோம் என்றும் பேராயர் கூறினார்.

‘தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற நாங்கள் தள்ளப்பட்டோம், ஏனெனில் பல உண்மைகள் கம்பளத்தின் கீழ் துடைக்கப்பட்டுள்ளன,’ என்று அவர் மேலும் கூறினார்.

‘இந்த வத்திக்கானுக்கான பயணத்திற்காக நாங்கள் குறைந்தபட்ச தொகையை செலவழித்துள்ளோம். இலங்கையில் இருந்து அன்பான நன்கொடையாளர் ஒருவர் இந்த சுற்றுப்பயணத்திற்கு நிதியுதவி செய்துள்ளார்,’ என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...