பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய மாகாணமான சிஸ்தான்-பலூசிஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈரானின் புரட்சிக் காவலர் படைப் பிரிவின் மெய்க்காப்பாளர் கொல்லப்பட்டார்.
அதேவேளை சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் பிரிகேடியர்-ஜெனரல் ஹொசைன் அல்மாசி, சனிக்கிழமை பதுங்கியிருந்து காயமின்றி உயிர் பிழைத்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்கிழக்கில் ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) ஜெனரல் ஒருவரை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் ஈரானின் தென்கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் ‘குற்றவாளிகள்’ துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்த நிறுவனம் கூறியது.
இது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சிறுபான்மை பிரிவினைவாதிகள், பிற ஆயுதக் குழுக்கள் மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே மோதல்கள் நடந்தன.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தவர்களை, மாகாணத் தலைநகரான ஜாஹெடானுக்கு அருகே பாதுகாப்புப் படையினர் கைது செய்தது.
இதேவேளை கொல்லப்பட்ட மெய்க்காப்பாளர் மஹ்மூத் அப்சலான், பிராந்தியத்தில் உள்ள மற்றொரு IRGC தளபதியான ஜெனரல் பர்விஸ் அப்சலனின் மகன் என அடையாளம் கண்டுள்ளது.
ஏழ்மையான மாகாணமான ஆப்கானிஸ்தான் ஓபியம் மற்றும் ஹெராயின் ஒரு பெரிய கடத்தல் பாதையாகும், இது குற்றக் கும்பல்களுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையிலான மோதல்களுக்கு ஒரு முக்கிய புள்ளியாக அமைகிறது.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு புரட்சிக் காவலர் நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்விலேயே இந்தத் தாக்குதல் நடந்தது.
இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறிய மூன்று பேர் சிஸ்தான்-பலூசிஸ்தானில் கைது செய்யப்பட்டதாக ஈரான் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமையன்று பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது.
2019 ஆம் ஆண்டில், ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவ நிறுவனத்தின் மீதான துணிச்சலான தாக்குதல்களில் ஒன்றான சிஸ்தான்-பலூசிஸ்தானில் ஒரு தற்கொலை குண்டுதாரி 27 புரட்சிகர காவலர்களைக் கொன்றமை குறிப்பிடத்தக்கது.