சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு!

Date:

இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை  (ஏப்ரல் 25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2,850 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை நான்காவது முறையாக சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளுர் சீமெந்தின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்ளூர் சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்திருந்தன.
அதேபோல்,கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி 50 கிலோ கிராம் சீமெந்து மூடையின் விலை 350 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் 01ஆம் திகதி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் விலை 50 கிலோகிராம் மூடைக்கு 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...