சுயேட்சை எம்.பிக்கள் குழு, 21ஆவது திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை சமர்ப்பித்தது!

Date:

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான மற்றுமொரு பிரேரணை இன்று பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ இந்த பிரேரணையை தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 10 கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சுயேட்சையான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுவினால் இந்த பிரேரணை கூட்டாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் தேசிய நெருக்கடி குறித்து அண்மையில் பாராளுமன்றத்தில் சுயேட்சையாக மாறிய ஆளும் கட்சியைச் சேர்ந்த 40 எம்.பி.க்கள் சார்பில் அவர் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளார்.

21ஆவது திருத்தம் தொடர்பான சுயேட்சைக் குழுவின் பிரேரணையில் 20வது திருத்தம் நீக்கப்பட வேண்டும் என்றும் 19வது திருத்தத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கோருகிறது.

அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது பிரேரணை இதுவாகும்.

இதேவேளை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனையை நேற்று சபாநாயகரிடம் கையளித்தது.

இந்த யோசனை அந்தக்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் மற்றும் ஏனைய முக்கிய சீர்திருத்தங்களுக்கு உட்பட்டது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...