நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள்: ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!

Date:

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்
தீப் பந்தம் ஏந்தியவாறு பல்கலைக்கழக பிரதான வீதியில் சற்று முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை 6 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், இன்று (3) நாடு முழுவதும் பல பொதுப் போராட்டங்கள் காணப்பட்டன.

பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

எவ்வாறாயினும், எம்பிக்கள் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் அவர்கள் பாதுகாப்புப் படையினரால் தடுக்கப்பட்டனர்.

மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) இன்று மஹரகமவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது, பின்னர் பொலிஸாரால் இடையூறு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அரசாங்கத்திற்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர்.

இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளில் சிறிய சிவில் போராட்டங்களும் காணப்பட்டன. சிறிய குழுக்களாக பொது மக்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு காணப்பட்டனர்.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...