சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் நிதியமைச்சர் அலிசப்ரி இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, நிதியமைச்சர் வந்தவுடன், எதிர்காலத்திற்கான வரைபடத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்றும் கூறினார்.
மேலும், எதிர்க்கட்சிகள் துண்டு துண்டாக பேசி வருவதாகவும், நிதி நெருக்கடியை சமாளிக்க நிவாரணம் பெற நிதி அமைச்சர் ஆலோசித்து வருவதாகவும் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.