பிரதமரின் வீட்டை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேயராம பகுதியை வந்தடைந்துள்ளது.

இவர்கள் விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு புறக்கோட்டையில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியை நடத்துவதற்கு ஆரம்பத்தில் மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

எனினும் தற்போது, காலிமுகத்திடலில் பகுதிக்கு செல்ல முடியாதவாறு வீதித்தடைகளை போட்டும் மற்றும் நீதிமன்றத்தின் தடையுத்தரவை பெற்றும் பொலிஸார் பேரணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் மாணவர்கள் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இருந்து மருதானை ஊடாக பிரதமரின் இல்லத்திற்கு முன்னால் சென்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...