புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அரசாங்கத்தின் 11 சுயேட்சைக் கட்சிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அரசாங்கத்தின் 11 சுயேட்சைக் கட்சிகள் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி, இலங்கையில் தற்போது நிலவும் தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் வரை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இருக்க தீர்மானித்திருந்தன.
சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஆலோசிப்பதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அழைப்பு விடுத்திருந்தார்.