போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்காக கொழும்பில் பல வீதிகள் மூடப்பட்டன!

Date:

எந்தவொரு எதிர்ப்புப் பேரணிகளும் இடம்பெறாதிருக்க கொழும்பில் உள்ள லோட்டஸ் வீதி பொலிஸாரால் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதநேரம், வாகன சாரதிகள் அசௌகரியங்களை தவிர்க்க மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வீதிகளும் தடைப்பட்டுள்ளன.

மேலும், போராட்டக்காரர்கள் சைத்யா சாலை மற்றும் ஜனாதிபதி மாவத்தை சுற்றுவட்டம் செராமிக் சந்தியிலிருந்து யோர்க் தெருவில் இருந்து G.O.H இலிருந்து நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தடுப்புகளை மீறி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்காக பல வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை கோட்டை பொலிஸார் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளதுடன் குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஏனைய இடங்களில் பணிபுரிபவர்கள் வாகனங்களை சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், லேக் ஹவுஸ் முன்றலில் உள்ள நெலும் மாவத்தை பகுதி போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டுள்ளது.

தற்போது கலதாரி ஹோட்டலுக்கு அண்மித்த வீதியை பொலிஸார் வீதித் தடைகளை பயன்படுத்தி தடை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...