முன்னாள் அமைச்சர்கள் வீட்டுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!

Date:

முன்னாள் அமைச்சர் காமினி லொகுகேவின் பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் இருந்த பெரிய பதாகை ஒன்றிற்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின் முன்னால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் முன்னால் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த பதாகை ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு முன்னாலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை வீசியுள்ளனர்.

இன்றைய தினம் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் பாரியளவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விசேட குழு!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து,...

புதிய தொல்பொருள் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பேராசிரியர் பி.ஏ. ஹுசைன்மியா நியமனம்!

மலாய், தென் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய ஆய்வுகளில் சர்வதேச ரீதியாக அறியப்படும்...

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...