யாழ் வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு!

Date:

யாழ்ப்பாணத்துக்கு நேற்று (24) விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் பின்னர் இங்கு இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்ற தூதுவர் ஜுலி சங் கொழும்பில் பல்வேறு சந்திப்புகளில் கலந்துக் கொண்டிருந்தார். இலங்கையில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் அவரது முதலாவது வெளி மாகாணத்திற்கான விஜயமாக வட மாகாணமாக அமைந்துள்ளது.

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கிணேஷ்வரன் மற்றும் யாழ் ஆயர் உட்பட சிவில் சமூகத்தினரையும் சந்தித்து இதன் போது கலந்துரையாடினர். அதே போன்று யாழ். நூலகத்திற்கும் விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...