யாழ்ப்பாணத்துக்கு நேற்று (24) விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதர், கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் பின்னர் இங்கு இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்ற தூதுவர் ஜுலி சங் கொழும்பில் பல்வேறு சந்திப்புகளில் கலந்துக் கொண்டிருந்தார். இலங்கையில் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் அவரது முதலாவது வெளி மாகாணத்திற்கான விஜயமாக வட மாகாணமாக அமைந்துள்ளது.
வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கிணேஷ்வரன் மற்றும் யாழ் ஆயர் உட்பட சிவில் சமூகத்தினரையும் சந்தித்து இதன் போது கலந்துரையாடினர். அதே போன்று யாழ். நூலகத்திற்கும் விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.