ரமழான் பண்டிகையை முன்னிட்டு கட்டார் சிறையில் உள்ள 20 இலங்கையர்களுக்கு விடுதலை!

Date:

ரமழான் பண்டிகையை முன்னிட்டு கட்டார் நாட்டில் பல்வேறு குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் 20 இலங்கை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கட்டார் அரசாங்கத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டுள்ள 20 இலங்கையர்களும் கட்டார் நாட்டில் கடமையாற்றும் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை பெற்றவர்களாவர்.

மேலும், சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, நாட்டில் உள்ள நீதிமன்றங்களால் செலுத்தப்பட வேண்டிய நிதி அபராதங்களிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியம் மேலும் தெரிவித்துள்ளது.

ரமழான் பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை எடுத்ததற்காக கட்டார் அரசை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...