ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆஜராகினர்!

Date:

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்ட ரம்புக்கன சம்பவம் தொடர்பாகவே இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

இதன்படி, பொலிஸ் மா அதிபர் அதற்கமைய ஐ.ஜி.பி விக்ரமரத்ன மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சம்பவ இடத்தில் இருந்த பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததற்கு பொறுப்பான நபர்கள் மற்றும் துப்பாக்கியை பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை கூறியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ரம்புக்கனை பிரதேசவாசிகள், அப்பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள், நீதித்துறை வைத்திய அதிகாரி மற்றும் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலை ஊழியர்களை விசாரணைகளின் ஒரு பகுதியாக ஆணைக்குழு பார்வையிடவுள்ளது.

விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையம், சம்பவம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யும்.

அண்மையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வேகமாக அதிகரித்து பதற்றமான சூழலுக்கு வழிவகுத்த நிலையில் ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சமிந்த லக்ஷான் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...