ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆஜராகினர்!

Date:

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்ட ரம்புக்கன சம்பவம் தொடர்பாகவே இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

இதன்படி, பொலிஸ் மா அதிபர் அதற்கமைய ஐ.ஜி.பி விக்ரமரத்ன மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சம்பவ இடத்தில் இருந்த பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததற்கு பொறுப்பான நபர்கள் மற்றும் துப்பாக்கியை பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை கூறியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ரம்புக்கனை பிரதேசவாசிகள், அப்பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள், நீதித்துறை வைத்திய அதிகாரி மற்றும் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலை ஊழியர்களை விசாரணைகளின் ஒரு பகுதியாக ஆணைக்குழு பார்வையிடவுள்ளது.

விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையம், சம்பவம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யும்.

அண்மையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வேகமாக அதிகரித்து பதற்றமான சூழலுக்கு வழிவகுத்த நிலையில் ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சமிந்த லக்ஷான் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...