ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆஜராகினர்!

Date:

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்ட ரம்புக்கன சம்பவம் தொடர்பாகவே இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.

இதன்படி, பொலிஸ் மா அதிபர் அதற்கமைய ஐ.ஜி.பி விக்ரமரத்ன மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தனர்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சம்பவ இடத்தில் இருந்த பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்ததற்கு பொறுப்பான நபர்கள் மற்றும் துப்பாக்கியை பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை கூறியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட ரம்புக்கனை பிரதேசவாசிகள், அப்பகுதிக்கு அனுப்பப்பட்டிருந்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள், நீதித்துறை வைத்திய அதிகாரி மற்றும் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலை ஊழியர்களை விசாரணைகளின் ஒரு பகுதியாக ஆணைக்குழு பார்வையிடவுள்ளது.

விசாரணைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், மனித உரிமைகள் ஆணையம், சம்பவம் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யும்.

அண்மையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வேகமாக அதிகரித்து பதற்றமான சூழலுக்கு வழிவகுத்த நிலையில் ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சமிந்த லக்ஷான் என்ற நபர் உயிரிழந்துள்ளார்.

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...