2ஆவது தடவையாக பிரான்ஸ் ஜனாதிபதியாகும் மேக்ரான்: வலதுசாரி வேட்பாளருக்கு தோல்வி!

Date:

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரி ஆதரவாளரான மரைன் லு பென் 42 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

அதற்கமைய இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகிறார்.

பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உட்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.
இதனால் நேற்று நடந்த பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன்போது, வாக்கு எண்ணிக்கையில் மேக்ரான் 58.2 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், இரண்டாவது முறை அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அறிந்த இமானுவல் மேக்ரான், வாக்களித்த மக்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

மேலும், இரண்டாவது முறையாக பிரான்ஸ் ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள இமானுவல் மேக்ரானுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, போர்ச்சுக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை விலைவாசி உயர்வு, கொவிட் பரவல், கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி எனத் தொடர்ந்து பின்னடைவை மேக்ரான் சந்தித்து வந்தார். இந்நிலையில் அவர் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...