அநுர குமார திசாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுகிறார்: பாராளுமன்றில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Date:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வன்முறைப் போராட்டங்களைத் தூண்டுவதாகக் கூறி அவர் மீது பாராளுமன்றத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் அவர் மீது கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், பாராளுமன்றத்தில் கடும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்து வரும் வழியில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் அனுரகுமார திஸாநாயக்க அரட்டை அடிப்பதையும் அவர்களுடன் உணர்வுகளை எதிரொலிப்பதையும் காணமுடிந்ததாக அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.

அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,

‘எவருக்கும் எதிராக வன்முறை மற்றும் நாசவேலைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு போராட்டக்காரர்களைத் தூண்டுவது ஜே.வி.பி தலைவருக்கு பொருத்தமற்றது என்று கூறினார்.

மேலும் 1988/ 1989 காலப்பகுதியில் ஜேவிபி தலைவர்கள் இதேபோன்ற கொலைக் கலாச்சாரத்தை தூண்டியதாக அவர் குற்றம்சாட்டினர்.

‘இன்று, நீங்கள் போராட்டக்காரர்களுடனான உரையாடலில் உங்கள் முகத்தை காண்பித்ததால், நீங்கள் தலைமறைவாக உள்ளீர்கள்’ என்றும் ஜோன்ஸடன் பெர்னாண்டோ சபையில் ஆவேசமாக கருத்து வெளியிட்டுள்ளார்.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...