அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பின!

Date:

நாட்டில் சகல பொது போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியது.

கடந்த சனிக்கிழமை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரதங்கள், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் இன்று காலை 6.00 மணி முதல் தமது சேவைகளை ஆரம்பித்தன.

அதன்படி, அனைத்து அலுவலக புகையிரதங்களும் வழமை போன்று மீண்டும் பாதையில் பயணித்துள்ளதாகவும், எனினும் நீண்ட தூர புகையிரதங்கள் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

அனைத்து டிப்போக்களுக்கும் சொந்தமான பேருந்துகள் திட்டமிட்ட நேர அட்டவணையின்படி மீண்டும் வீதிக்கு வந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதுள்ள 15 வீதமான பேருந்துகள் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று டீசல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து – நியமிக்கப்பட்ட ளுடுவுடீ டிப்போக்களில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...