நாட்டில் சகல பொது போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியது.
கடந்த சனிக்கிழமை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து புகையிரதங்கள், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் இன்று காலை 6.00 மணி முதல் தமது சேவைகளை ஆரம்பித்தன.
அதன்படி, அனைத்து அலுவலக புகையிரதங்களும் வழமை போன்று மீண்டும் பாதையில் பயணித்துள்ளதாகவும், எனினும் நீண்ட தூர புகையிரதங்கள் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தாமதமாக இயக்கப்பட்டதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
அனைத்து டிப்போக்களுக்கும் சொந்தமான பேருந்துகள் திட்டமிட்ட நேர அட்டவணையின்படி மீண்டும் வீதிக்கு வந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போதுள்ள 15 வீதமான பேருந்துகள் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று டீசல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து – நியமிக்கப்பட்ட ளுடுவுடீ டிப்போக்களில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பேருந்துகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.