ஆசிரியர்களை அருகில் உள்ள பாடசாலைகளில் பணியமர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை!

Date:

மாணவர்களின் போக்குவரத்து பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும், ஆசிரியர்களை அருகில் உள்ள பாடசாலைக்கு பணியமர்த்துமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

அதிகரித்து வரும் போக்குவரத்துச் செலவுகள் மற்றும் ஏனைய இடையூறுகளைக் கருத்தில் கொண்டு அருகாமையில் உள்ள பாடசாலைகளில் தமக்கு நியமனம் வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு பல ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதற்கமைய எதிர்காலத்தில் திட்டவட்டமான திட்டத்தை சமர்பிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டில் சுமார் 10,155 பாடசாலைகள் இயங்குகின்றன. நாட்டில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பாடசாலைகளும் உள்ளன. 51வீத பாடசாலைகள் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட ஆரம்ப பள்ளிகள் உள்ளன.

78வீத பாடசாலைகளில் 500இற்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். 92வீத பாடசாலைகளில் 1,000க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர். 1,462 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் உள்ளனர்.

மேலும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3000 பாடசாலைகள் உள்ளன. எனவே, பாடசாலைகளுக்கு வரும் பிள்ளைகளுடனான பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

அதன்பின்னர் போக்குவரத்து பிரச்சினைகளை ஆசிரியர்களுடன் ஆராயலாம் என பேராசிரியர் பெரேரா தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...