இந்தியா, இந்தோனேசியாவிடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள்!

Date:

இந்திய அரசினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை வந்தடையும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான காரியல் கப்பல் மூலம் இலங்கை வந்தடையும் என்று அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கைக்கு நன்கொடையாக ஒரு வாரத்திற்குள் இந்தோனேசிய அரசாங்கத்திடமிருந்து 340 மில்லியன் ரூபாள் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள், கிடைக்கபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டில் இருந்து மேலும் நன்கொடைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

போதைப்பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் இதற்கான உதவிகளை செய்து வருவதாகவும் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...