‘ஈஸ்டர் தாக்குதல் உண்மையைக் கண்டறிய சர்வதேச உதவியைப் பெற தள்ளப்பட்டுள்ளோம்’ :வத்திக்கானிலிருந்து பேராயர்

Date:

(FilePhoto)

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற நாங்கள் தள்ளப்பட்டோம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக, இலங்கை ஆயர்கள் மற்றும் தாக்குதலில் காயமடைந்த குழுவினருடன், திருத்தந்தை பாப்பரசர் பிரான்சிஸ் நாளை சிறப்பு பிரார்த்தனை ஆராதனையை நடத்துகிறார்.

இந்நிலையிலேயே வத்திக்கானில் இருந்து மெல்கம் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ‘இது ஒரு அரசியல் நிகழ்வாக இருக்காது, ஈஸ்டர் ஞாயிறு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நடத்தப்படும் ஒரு சேவை மட்டுமே.

அவர்களின் அவல நிலையை உலகுக்கு காட்ட மட்டுமே நாங்கள் விரும்புகிறோம் என்றும் பேராயர் கூறினார்.

‘தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிய சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற நாங்கள் தள்ளப்பட்டோம், ஏனெனில் பல உண்மைகள் கம்பளத்தின் கீழ் துடைக்கப்பட்டுள்ளன,’ என்று அவர் மேலும் கூறினார்.

‘இந்த வத்திக்கானுக்கான பயணத்திற்காக நாங்கள் குறைந்தபட்ச தொகையை செலவழித்துள்ளோம். இலங்கையில் இருந்து அன்பான நன்கொடையாளர் ஒருவர் இந்த சுற்றுப்பயணத்திற்கு நிதியுதவி செய்துள்ளார்,’ என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...