காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

Date:

காலி முகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த தேரிப்பேஹே சிறிதம்ம தேரர் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேரர் இன்று காலை பொது வைத்தியசாலையில் (ETU) பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக சிறிதம்ம தேரர் சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த புதன்கிழமை ஆரம்பித்தார்.

இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் உடல்நலக்குறைவால் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதியை பதவி விலகுமாறும் வலியுறுத்தி காலிமுகத்திடலில் 14 ஆவது நாளாக தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை ரத்துபஸ்வெலயில் நீருக்கான போராட்டத்தை வழிநடத்திய தெரிபெஹே சிறிதம்ம தேரர் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...