இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்திய அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இணைந்து கொண்டுள்ளார்.
இந்த போராட்டத்தின் போது, மெல்கம் கர்தினால் ரஞ்சித் பல பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்துள்ளனர்.
இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் இலங்கையின் தேசியக் கொடியையும் ஏந்தியவாறு காணப்பட்டனர்.
தற்போதைய நெருக்கடி நிலையில், நாடு முழுவதும் மக்கள் திரண்டு போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்று பொது மக்கள் பல பிரதேசங்களில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் தேசியக் கொடியையும் ஏந்தி ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.