கொழும்பில் மண்ணெண்ணய்க்கான கேள்வி அதிகரிப்பு: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Date:

சமையல் எரிவாயு விலையேற்றத்தை அடுத்து மண்ணெண்ணய்க்கான கேள்வி மேலும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு நகர் பகுதிகளுக்குள் வாழும் மக்களுக்கு வேறு தெரிவே கிடையாது என்பதால் காலை முதல் மாலை வரை மக்கள் மண்ணெண்ய்க்காக வரிசையில் நின்று கொண்டு காத்திருக்கிறார்கள்.

அவர்களின் வாழ்விட அமைவு சூழலில் விறகு பாவனை பற்றி எல்லாம் எண்ணிக் கூட பார்க்க முடியாது. இன்று முற்பகல் 11.30 அளவில் கொழும்பு கிறேண்ட்பாஸ் பகுதியில்மக்கள் நீண்ட வரிசையில் இருந்த காட்சியே இது.

மக்கள் இந்தப் பிரச்சினைக்கு என்ன தீர்வு. அது எப்போது அமுலுக்கு வரும் என்று ஒரு வார காலமாக பாராளுமன்றம் கூடியும் காத்திரமான எந்த முடிவும் இல்லை. கதிரைகளை கணக்குப் போடும் விளையாட்டு தான் நடந்தது. தொடர்ந்தும் நடக்கின்றது.

இந்தக் கதிரைகள் ஏல விற்பனையில் விற்பனையாகி சிலர் பதவிகளைப் பெற்றுக் கொண்ட கேவலத்தை தவிர, பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டவில்லை.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...