பிரதமரின் வீட்டை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேயராம பகுதியை வந்தடைந்துள்ளது.

இவர்கள் விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு புறக்கோட்டையில் இருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி பேரணியை நடத்துவதற்கு ஆரம்பத்தில் மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

எனினும் தற்போது, காலிமுகத்திடலில் பகுதிக்கு செல்ல முடியாதவாறு வீதித்தடைகளை போட்டும் மற்றும் நீதிமன்றத்தின் தடையுத்தரவை பெற்றும் பொலிஸார் பேரணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் மாணவர்கள் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இருந்து மருதானை ஊடாக பிரதமரின் இல்லத்திற்கு முன்னால் சென்று போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...